பேருந்து மீது மோதிய ஆட்டோ! இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
பேருந்து மீது மோதிய ஆட்டோ! இருவர் காயம்..

கிளிநொச்சி நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி பின் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பேருந்து தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் முச்சக்கரவண்டி பலமாக சேதம் அடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற நேரம் அதிக போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்பட்டது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் 

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு