புளியம்பொக்கணை ஆலயத்திற்கு சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிய உழவு இயந்திரம் மீது மோதிய கப் வாகனம்!

ஆசிரியர் - Editor I
புளியம்பொக்கணை ஆலயத்திற்கு சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிய உழவு இயந்திரம் மீது மோதிய கப் வாகனம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனத்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவமானது கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆவயத்திற்கு சென்று, திரும்பி யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திரம் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டவேளை 

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய நிலையில் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு