ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்த திரையரங்கு மீது தாக்குதல்!! -ரஷ்யா படைகள் மூர்க்கத்தனம்-

ஆசிரியர் - Editor II
ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்த திரையரங்கு மீது தாக்குதல்!! -ரஷ்யா படைகள் மூர்க்கத்தனம்-

உக்ரைன் மரியபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை.

22 ஆவது நாளாக உக்ரைனில் பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த நகரில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்தும், வீடுகளை இழந்தோரும் திரையரங்கு ஒன்றில் தங்கியிருந்தனர். 

குறித்த திரையரங்கு மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில், அந்த திரையரங்கு நொறுங்கியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

அங்கு தாக்குதல் நடந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான திரையரங்கு கட்டடத்தின் முன்பக்கத்தில் ரஷ்ய மொழியில் குழந்தைகள் என எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு