தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகள் பெற்ற மகன்! தற்கொலைக்கு முயன்ற தாய்..

ஆசிரியர் - Editor I
தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகள் பெற்ற மகன்! தற்கொலைக்கு முயன்ற தாய்..

2021ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தனது மகன் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகளை பெற்றதால் தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 

நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்த நிலையில் தனது மகன் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகளை பெற்றமையால் தாய் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு