பாடசாலை கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றிருந்த மாணவன் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
பாடசாலை கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றிருந்த மாணவன் சடலமாக மீட்பு..!

பாடசாலைகளில் கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பொகவந்தலாவ - செவ்வகத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தை சேர்ந்த உயிரிழந்த மாணவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் 

பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிகெட் சுற்று போட்டியினை கண்டு கழித்து விட்டு வீடு திரும்புள்ளார். இதனையடுத்து, சிறுவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள தேடிய நிலையில் 

மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடப்பதை சிறுவனின் உறவினர்கள் கண்டுள்ளனர். பின்னர் சிறுவனை மீட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதோடு இந்த சிறுவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு