தோ‌ஷத்தால் தொடர் பாதிப்பு!! -காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண்-

ஆசிரியர் - Editor II
தோ‌ஷத்தால் தொடர் பாதிப்பு!! -காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண்-

தோ‌ஷத்தால் பாதிப்பு காதல் கணவருக்கு உயிரை விட்ட இளம்பெண் என்னுடைய உடல் உறுப்புகளை தானமா கொடுத்து விடுங்கள் என கடிதம் எழுதி வைத்தார்.

கோவையை சேர்ந்த மாலதி (வயது 21) என்பவர், உறவினரான வாடகை கார் சாரதியான பார்த்திபன் (வயது 25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாவே மனவருத்தத்தில் இருந்த மாலதி ரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை மீட்டதுடன், விசாரணைகளை ஆரம்பித்தனர். அப்போது மாலதியின் வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை. இது எனக்கு நானே செய்து கொண்ட பரிகாரம். நான் என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம் தான்.

எனது கணவருக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர். ஆனால் நான் அது எதையும் கண்டு கொள்ளாமல், போராடி காதலரை கரம் பிடித்தேன்.

ஆனால் அந்த தோ‌ஷத்தால் எனது கணவர் தினம், தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை. எனது கணவர் உயிர் காப்பாத்துறதுக்காக என் உயிரை விடவும் தயாராக இருக்கேன். இது நானே நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இதுக்கு யாரும் காரணம் இல்லை.

என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமா கொடுத்து விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு