உ.பி,யில் மீள ஆட்சி அமைத்த பா.ஜ.க!! -37 ஆண்டுக்கு பின் சாதனை-

ஆசிரியர் - Editor II
உ.பி,யில் மீள ஆட்சி அமைத்த பா.ஜ.க!! -37 ஆண்டுக்கு பின் சாதனை-

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் 37 ஆண்டுகளுக்கு பின் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட சாதனையை பாரதிய ஜனதா நிகழ்த்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

நேரம் செல்ல, செல்ல பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 267 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை உறுதி செய்தது.

அந்த மாநிலத்தின் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், தம்மை அடுத்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுப்கவாதி உபேந்திர தத் சுக்லாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். இதே போல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவர் போட்டியிட்ட கார்கால் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார்.

அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மை தேவையான 202 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளதால், பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி கண்ட சமாஜ்வாதி, இந்த முறை 138 தொகுதிகளில் முன்னிலை கண்டு பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர உள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிகழ்வு 37 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தேர்தலில் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க நிகழ்த்தி உள்ள தொடர் வெற்றியை அடுத்து அந்த கட்சியின் தொண்டர்கள் பல்வேறு ஊர்களில் வெற்றிக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு