கள்ள மணல் விவகாரம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது..! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கள்ள மணல் விவகாரம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது..! இருவர் படுகாயம்..

திருகோணமலை - நடுவூற்று பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் வயது (30), ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் வயது(30 )ஆகிய இருவரும் பலத்து காயத்துக்குள்ளாகியுள்னனர். மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு