முதியவரை மோதிதள்ளிவிட்டு தப்பி ஓட முயற்சித்த சிவில் உடையிலிருந்த பொலிஸார்! பொதுமக்கள் - பொலிஸர் இடையே குழப்பம்..

ஆசிரியர் - Editor I
முதியவரை மோதிதள்ளிவிட்டு தப்பி ஓட முயற்சித்த சிவில் உடையிலிருந்த பொலிஸார்! பொதுமக்கள் - பொலிஸர் இடையே குழப்பம்..

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் மோதியதில் முதியவர் காயமடைந்துள்ளார். 

இந்நிலையில் மோட்டார் சைக்கிளால் மோதியவர்கள் தப்பி ஓடுவதற்கு முயற்சித்த நிலையில் பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்திருக்கின்றனர். 

பின்னர் பிடிக்கப்பட்ட நபர்களும் பொலிஸார் என்பதை அறிந்துகொண்ட பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த பொலிஸார் சமாளிக்க முயன்றதால் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்ததுடன், வயோதிபரை மோதியவர்கள் 

மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு