ஐஸ்கிறீம் விற்பனை வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 29 வயது இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
ஐஸ்கிறீம் விற்பனை வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 29 வயது இளைஞன் பலி..

கிளிநொச்சி - அம்பாள்நகர் பகுதியில் ஐஸ் கிறீம் விற்பனை செய்யும் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியில் அம்பாள் நகர் பகுதியில் ஐஸ் கிறீம் விற்பனை செய்யும் வாகனமும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளம் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் (வயது29) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளான். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் 

என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரிணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு