அம்மம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி வீட்டிலிருந்து சென்ற 22 வயதான இளம்பெண் ரயில் மோதி பலி..!

ஆசிரியர் - Editor I
அம்மம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி வீட்டிலிருந்து சென்ற 22 வயதான இளம்பெண் ரயில் மோதி பலி..!

அம்மம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற 22 வயது பெண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மாங்குளம் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் கற்குவாரிப் பகுதியில் வசித்து வரும் 22 அகவையுடைய திருச்செல்வம் நிதர்சனா 

என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வவுனியா ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் 

சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில் வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில் யுவதி 

ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விபத்தா? தற்கொலையா?

என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு