சுண்டிக்குளம் பகுதியில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு கண்டுபிடிக்கப்பட்டது! வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில்..

ஆசிரியர் - Editor I
சுண்டிக்குளம் பகுதியில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு கண்டுபிடிக்கப்பட்டது! வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில்..

சுண்டிக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு