அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்..! வடக்கிலும் மக்களால் நிரம்பும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்..

ஆசிரியர் - Editor I
அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்..! வடக்கிலும் மக்களால் நிரம்பும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்..

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர்.

பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.இவ்விடயம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் வினவியபோது, 

இருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்து போயுள்ளது. வருகைதரும் மக்களிற்கு வழங்க முடியவில்லை. இருப்பில் உள்ள சுப்பர் பெற்றோலையே வழங்குகின்றோம். அதுவும் குறைவாகவே உள்ளது.

இருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோல் மற்றும் டீசலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குவதாக தெரிவித்தார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு