யாழ்ப்பாணத்திருந்து சென்று முல்லைத்தீவில் வன்முறை..! கூண்டோடு அமுக்கிய பொதுமக்கள், 5 பேர் காயம், 13 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திருந்து சென்று முல்லைத்தீவில் வன்முறை..! கூண்டோடு அமுக்கிய பொதுமக்கள், 5 பேர் காயம், 13 பேர் கைது..

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தனியார் பேருந்து மூலம் முல்லைத்தீவு - அளம்பில் பகுதிக்கு சென்று வீடொன்றில் வன்முறையில் ஈடுபட்டிருந்த குழுவை ஊர் மக்கள் மடக்கி பிடித்து கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

நேற்றய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

கீரிமலையில் இருந்து சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையல் ஈடுபடும் தனியார் பேருந்தை வாடகைக்கு பிடித்துக் கொண்டு அளம்பில் பகுதிக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது இரு தரப்பிலிருந்தும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து அயலவர்கள் ஒன்றுகூடி பஸ்சை மடக்கியதுடன், பேருந்தில் இருந்தவர்களை மடக்கி பிடித்து கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்நிலையில் பொலிஸாரினால் 13 பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். இதன்போது தலா 2 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு எதிர்வரும் 6ம் மாதம் 23ம் திகதிக்கு திகதியிடப்பட்டது. 

பொதுமக்களால் முறையாக கவனிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மடக்கி பிடிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்கவதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு