யாழ்.காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் 

அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு மலேரியா, 

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு