யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை! ஜனாதிபதியின் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை! ஜனாதிபதியின் பணிப்பு..

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்க இலங்கை, இந்திய பக்கதர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கின்றார். 

அதற்கமைய அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ்.மாவட்டரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் 

அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு