போதை மாத்திரைகளுடன் போலி மருத்துவர் சிக்கினார்..!

ஆசிரியர் - Editor I
போதை மாத்திரைகளுடன் போலி மருத்துவர் சிக்கினார்..!

தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ஆசாமியை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் ஹட்டன்-கொட்டகலை பகுதியில் உள்ள வர்த்தக பகுதி வீடொன்றில் தங்கியிருந்து இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள மருந்தகமொன்றில் கடமையாற்றி வருவதுடன், அவரிடமிருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். 

மேலும், கைது செய்யப்பட்ட போலி மருத்துவரிடம் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ய வருகைத்தந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக திம்புளை பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு