புதையல் தோண்டுவதாக கூறி 7 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பூசகர் 21 வயது பெண்ணுடன் கைது!

ஆசிரியர் - Editor I
புதையல் தோண்டுவதாக கூறி 7 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பூசகர் 21 வயது பெண்ணுடன் கைது!

புதையல் தோண்டுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மாத்தளை - நாவுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 46 வயது பூசகருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர் புதையல் தோண்டுவதுபோல் காட்டி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. 

இவ்வாறு 7 பெண்களிடம் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

நவகத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர் நவகத்தேக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் புதையல் தோண்டும் பாணியில் பெண்களிடமிருந்து பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பலவற்றை கையாடல் செய்துள்ளவர் எனவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு