தாயின் அனுமதியுடன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி! தாய் மற்றும் 3 குடும்பஸ்த்தர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
தாயின் அனுமதியுடன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி! தாய் மற்றும் 3 குடும்பஸ்த்தர்கள் கைது..

தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரை மீட்டுள்ள பொலிஸார் தாய் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். 

பதுளை - ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, 

வைத்தியர்களால் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாதம் கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்க்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் 

பதுளைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு 

அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் 

ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் மூன்றாவது சந்தேக நபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு