இந்திய இழுவை படகுகளை ஏலத்தில் விற்கும் பணிகள் யாழ்.காரைநகரில் ஆரம்பமானது..!

ஆசிரியர் - Editor I
இந்திய இழுவை படகுகளை ஏலத்தில் விற்கும் பணிகள் யாழ்.காரைநகரில் ஆரம்பமானது..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்தமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகுகள் இன்று காலை முதல் காரைநகரில் எலத்தில் விற்கப்படுகின்றது. 

இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளது.

அந்த வகையில் காரைநகரில் உள்ள படகுகள் ஏலம்விடும் பணி தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு