இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்காலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆசிரியர் - Editor I
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்காலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கி செல்கிறது.

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 

அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு