மரம் வெட்டும் இயந்திரத்தால் வெட்டி ஒருவர் கொலை..! இரண்டு கால்களும் துண்டிப்பு, 54 வயதான சந்தேகநபர் கைது..

ஆசிரியர் - Editor I
மரம் வெட்டும் இயந்திரத்தால் வெட்டி ஒருவர் கொலை..! இரண்டு கால்களும் துண்டிப்பு, 54 வயதான சந்தேகநபர் கைது..

மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தால் கால்களை வெட்டி துண்டாக்கி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் கண்டி - கட்டுகஸ்தோட்ட  மஹங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், 

ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

சத்திரசிகிச்சையின் உட்படுத்தப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பொஹலியத்த – கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு