யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கேட்கிறது புளொட்!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கேட்கிறது புளொட்!

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 3 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், ஏனைய மாவட்­டங்­க­ளில் தலா ஓர் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தின் தவி­சா­ளர் பத­வி­யை­யும் கோர­வுள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட் கட்­சி­யின் தலை­வர் த.சித்­தார்த்­தன் கூறி­னார்.

வடக்கு மாகா­ணத்­தில் வன்­னிப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மாவட்­டங்­க­ளின் பங்­கீ­டு­கள் தொடர்­பில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டம் தொடர்­பில் மாத்­தி­ரமே இன்­னும் பேச்சு முன்­னெ­டுக்­க­ வேண்­டி­யுள்­ளது. 

மற்­றொரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ, தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் பேசி இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. நாம், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர் பத­வி­யைக் கோர­வுள்­ளோம். 

மானிப்­பாய், சங்­கானை, வலி.தெற்கு ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யையே பெரும்­பா­லும் கோரு­வோம். இருப்­பி­னும் சில­வே­ளை­க­ளில் இந்­தச் சபை­க­ளில் மாற்­றம் வர­லாம். ஆனால் நாம் கோரும் எண்­ணிக்­கை­யில் மாற்­றம் வராது என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு