பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய நபர் கைது!

ஆசிரியர் - Admin
பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய நபர் கைது!

கிளிநொச்சி-கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்திய நபரைக் கைது செய்துள்ளதாகத் தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த போதே குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 கண்டாவளை பொறுப்பு வைத்திய அதிகாரியான பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்ட அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர் ஒருவர் அவரை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமன்றி கடும் தொனியில் அச்சுறுத்தியும் இருந்தார்.

அத்தோடு வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதோடு, அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் முயன்றுள்ளார்.

எனவே இது தொடர்பில் அவரின் தொலைபேசி உரையாடலை ஒலிப்பதிவு செய்த மருத்துவர் தர்மபுரம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
 
இந்த நிலையில் குறித்த நபரின் நடவடிக்கை சமூகத்தில் பல மட்டங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததோடு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பல தரப்பினர்களிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு