அதிகாலையில் நடந்த கோர விபத்து..! ஒருவர் பலி, 16 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த கோர விபத்து..! ஒருவர் பலி, 16 பேர் படுகாயம்..

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஹட்டன் - டிக்கோயா தரவளை பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 

16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பட்டல்கலை பகுதியில் இன்று(28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. 

விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு