நீதி அமைச்சர் அலி சப்ரி வடக்கிற்கு விஜயம்..! நடமாடும் சேவையினை ஆரம்பித்துவைத்தார்..

ஆசிரியர் - Editor I
நீதி அமைச்சர் அலி சப்ரி வடக்கிற்கு விஜயம்..! நடமாடும் சேவையினை ஆரம்பித்துவைத்தார்..

“நீதிக்கான அணுகல்” எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள நிலையில் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைத்துள்ளார். 

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சரை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வரவேற்பு நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து இழப்பீடுகளிற்கான திணைக்களத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றம் அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் உரையாற்றினர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு