உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகளும், நீதிபதி சம்பவ இடத்தில் விசாரணை..! தொலைபேசி, கத்தி, பெற்றோல் போத்தல் மீட்பு..

ஆசிரியர் - Editor I
உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகளும், நீதிபதி சம்பவ இடத்தில் விசாரணை..! தொலைபேசி, கத்தி, பெற்றோல் போத்தல் மீட்பு..

கிளிநொச்சி - புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் கடந்த 20ம் திகதி இரவு 11.50 மணியளவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் இன்று காலை நோில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோலும் மற்றும் ஒரு கத்தி, 

ஒரு தொலைபோசி என்பனவற்தை தடையில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு