கிளிநொச்சி - புன்னைநீராவியில் சோகம்! தாயும், மகளும் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி - புன்னைநீராவியில் சோகம்! தாயும், மகளும் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு..

கிளிநொச்சி புன்னை நீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது, தந்தையும் மகனும் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11.50 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர். சம்பவத்தில் 47 வயதான ஆனந்தராசா சீதேவி என்ற தாயாரும், 17 வயதான அவருடைய மகளுமே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு