பெண்கள் குளியல் அறையில் 3 இரகசிய கமெராக்கள்!! -ஆலயம் ஒன்றில் அதிர்ச்சிச் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
பெண்கள் குளியல் அறையில் 3 இரகசிய கமெராக்கள்!! -ஆலயம் ஒன்றில் அதிர்ச்சிச் சம்பவம்-

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ல ஆலயம் ஒன்றில் உள்ள பெண்கள் குளியல் அறையில் மூன்று இரகசிய கமெராக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அம்மாவட்டத்தின் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் ஆலயம் உள்ளது. கடந்த 17 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் அங்கு சென்றிருந்தனர்.

அச்சமயத்தில் அவ்வாலயத்திற்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக ஆலய வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கமெரா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து ஆலய நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் ஆலய நிர்வாகத்தினர்.

ஆலயத்தின் குளியலறையில் இருந்த இரகசிய கமெரா  கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் பொலிஸார் ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில் கூடுதலாக 2 இரகசிய கமெராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சமப்வம் தொடர்பில் பொலிஸார் குறித்த ஆலகத்தின் நிர்வாகத்தினரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு