கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ சாரதி! படுகாயமடைந்த சாரதிக்கு கொரோனா தொற்றும் உறுதி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ சாரதி! படுகாயமடைந்த சாரதிக்கு கொரோனா தொற்றும் உறுதி..

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. எதிரே வந்த பேருந்து ஒன்றுக்கு வழிவிடும்போது கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுமுன் எடுக்கப்பட்ட அன்டியன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை இவருடன் பயணித்த மற்றொருவரை காணவில்லை என சாரதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு