கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து..! 2 சிகிச்சை பிரிவுகள் மற்றும் 3 அறைகள் முற்றாக எரிந்து நாசம், பல மணிநேரம் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து..! 2 சிகிச்சை பிரிவுகள் மற்றும் 3 அறைகள் முற்றாக எரிந்து நாசம், பல மணிநேரம் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள்..

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றய தினம் நள்ளிரவு இடம்பெற்ற பாரிய தீ விபத்து பிரதேசசபை தீயணைப்பு பிரிவு மற்றும் படையினரின் பங்களிப்புடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருந்த நிலையில் பிரதேசசபை தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவு ஆகியன கடுமையாக போராடியே தீயை கட்டுப்படுத்தியுள்ளன. 

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டுவரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் மார்பு நோய் சிகிச்சை நிலையம், பாலியல் நோய் சிகிச்சை நிலையம், பரிசோதனை அறை, களஞ்சிய அறை, வைத்தியர் சிகிச்சை அறை ஆகியன எரிந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு