ஒருதலை காதலால் நடந்த விபரீதம்..! பெண் ஒருவர் உட்பட 7 பேர் மீது வாள்வெட்டு, தலைமறைவாகியிருந்த 7 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
ஒருதலை காதலால் நடந்த விபரீதம்..! பெண் ஒருவர் உட்பட 7 பேர் மீது வாள்வெட்டு, தலைமறைவாகியிருந்த 7 ரவுடிகள் கைது..

ஒருதலை காதலால் பெண் ஒருவருடைய உறவினர்கள் 7 பேர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் 

அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து கடந்த 9ம் திகதி 

குறித்த பெண்ணை காதலித்து வரும் இளைஞன் அவரது குழுவினருடன் பெண்ணின் உறவினர்கள் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட

 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த 7 பேரை 

நேற்று இரவு பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து வாள் மற்றும் கத்திகளை மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு