ஜல்லிக்கட்டில் காளை முட்டி உரிமையாளர் பலி!! -10 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
ஜல்லிக்கட்டில் காளை முட்டி உரிமையாளர் பலி!! -10 பேர் காயம்-

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மாட்டுப்பொங்கல் தினமான இன்று சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நடத்தப்பட்டது. 

காலை 10.30 மணிவரை நடந்த போட்டியில் 100 மாடுகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. 15 மாடுகள் மட்டுமே வீரர்களால் அடக்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி, உரிமையாளரான ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 30) என்பவர் படுகாயம் அடைந்தார். 

உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு