போலி சான்றிதழ் கொடுத்து 9 வருடமான பேராசிரியராக பணியாற்றியவர் கைது!!

ஆசிரியர் - Editor II
போலி சான்றிதழ் கொடுத்து 9 வருடமான பேராசிரியராக பணியாற்றியவர் கைது!!

இந்தியாவின் வேலூர் மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து 9 ஆண்டுகள் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பலகலைகழகத்தில் பன்னீர் செல்வம் என்பவர் விலங்கியல்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில் அவரது அனுபவ சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் அவரை பணியிடைநீக்கம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். இந்நிலையில் காட்பாடியிலுள்ள வீட்டில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு