இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்தமை ஆத்திரத்தை உண்டாக்குகிறது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..

ஆசிரியர் - Editor I
இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்தமை ஆத்திரத்தை உண்டாக்குகிறது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை அரசு தலையிட்டு தடை செய்தமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

"யாழ்.பல்கலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்துள்ள விடயம் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. அது ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கத் தக்கதுமான விடயம்" என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"வடக்கு - கிழக்கில் இருக்கக் கூடிய யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்க சமூகங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அனுபவித்த கட்டமைப்புகளாக உள்ளன.

அவற்றில் கல்வி கற்கும் சமூகம் போராலும் இனப் படுகொலையாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட - அதன் வலியை சுமந்தவர்களாக உள்ளனர். 

இந்த நிலையில் அவர்களின் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாடு மிகவும் ஆத்திரத்தைக் கொடுக்கின்றது.

பல்கலைக்கழக சமூகம் தமது முயற்சிகளைத் தொடரவேண்டும். அது ஒரு முக்கியமான முயற்சி. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று சிங்கள மாணவர்களும் வந்து படிக்கின்ற நிலையிலே இந்த மண்ணில் வாழும் மக்களின் பாதிப்பு மற்றும் அவர்கள் மனங்களின் வெளிப்பாடு போன்றவற்றை எடுத்துக் காட்டும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில்தான் இவ்வாறு உண்மைகள்  பதிவு செய்யப்படவேண்டியுள்ளன. எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது முழு ஒத்துழைப்பை வழங்குவோம்" என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு