திருமண ஆசைகாட்டிய பெற்றோர்! 16 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
திருமண ஆசைகாட்டிய பெற்றோர்! 16 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் கைது..

மட்டக்களப்பு - காத்தான்குடியில் 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி ஒரு வருடமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்த 23 வயதான இளைஞர் ஒருவர் நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசத்தில் 16 வயது சிறுமியின் தாயார் சுகயீனம் காரணமாக படுக்கையில் இருந்துவருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும்போது சிறுமியின் எதிர்வீட்டில் உள்ள இளைஞனை திருமணம் முடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் குறித்த இளைஞன் திருமண பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் இருந்து கடந்த ஒருவருடகாலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்துவந்த நிலையில் தற்போது சிறுமியை திருமணம் முடிக்க முடியாது என இளைஞர் மறுப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் 

பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்தனர். இதில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த 

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு