கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் பளை - தர்மக்கேணி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய நிலையில், 

பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு