சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்து எரிந்த சமையல் எரிவாயு அடுப்பு!

ஆசிரியர் - Editor I
சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்து எரிந்த சமையல் எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து எரிந்த நிலையில் சமைத்துக் கொண்டிருந்த பெண்மணி தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கையில் இடம்பெற்றுள்ளது. திடீர் என சத்தம்கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியில் ஒடிவந்ததாகவும், 

பின்னர் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார்.அதனையடுத்து உடன் வீட்டுக்குவந்த கணவன் அடுப்பின் ரேகுலேட்டரை அகற்றிவிட்டதாகவும், 

பின்னர் தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அடுப்பு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். 

பின்னர் தடையவியல் பொலிசாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு