இளைஞன் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொலிஸாருடன் நெருக்கம் உறவுகள் குற்றச்சாட்டு! வர்த்தகர்கள் நீதிகேட்டு கதவடைப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
இளைஞன் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொலிஸாருடன் நெருக்கம் உறவுகள் குற்றச்சாட்டு! வர்த்தகர்கள் நீதிகேட்டு கதவடைப்பு போராட்டம்..

புத்தாண்டு தினத்தில் போத்தலால் குத்தி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியை நிலைநாட்டக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். 

அதேபோல் மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், 

கொலையாளிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதுடன் பொலிசாருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாகவுள்ளனர் என்றும் உறவுகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும் கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் வர்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி 

 கதவடைப்பை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு