தோண்ட.. தோண்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும்..!

ஆசிரியர் - Editor I
தோண்ட.. தோண்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும்..!

கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு துப்பாக்கிகள், ஆர்.பி.ஜீ மற்றும் கனரக துப்பாக்கி ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்பபிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் கடந்த 26ம் திகதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலிற்கமைய தர்மபுரம் பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று நேற்று அகழ்வு பணிகளை ஆரம்பித்தனர். குறித்த அகழ்வு பணிகளின்போது ரி 56 ரக துப்பாகிகள், வெடி பொருட்கள் என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதன்போது மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும், வெடி பொருட்கள் ஆகியன துருப்பிடித்து காணப்படுவதாகவும், அவை செயல் திறண் உள்ளவையா என்பது தொடர்பில் அகழ்வு பணிகள் நிறைவுற்றதன் பின்னர் 

ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டதாகவும்

தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு