லண்டனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண் கொலை! வீசப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
லண்டனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண் கொலை! வீசப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..

லண்டனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண் ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள முதலை பாலத்தடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த நிலையில் அவர் காணாமல்போயுள்ளதா நேற்றய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக 

அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார். தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், 

பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் 

நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர்களை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர்.குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 

கந்தபுரம் மரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், 

கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு