மாடு மேய்க்க சென்றிருந்த தாயும், 3 வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் - Editor I
மாடு மேய்க்க சென்றிருந்த தாயும், 3 வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!

தாயாருடன் மாடு மேய்க்கச் சென்றருந்த 3 வயது குழந்தையும், தாயும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நேற்று (27-12-2021) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரும் அவருடன் கூட இருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்றும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளது. 

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சி

கிச்சை பெற்று வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு