கௌதாரிமுனையில் யாழ்.ஆனைக்கோட்டை இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்கள் தப்பி ஓட்டம்! குருநகர் பகுதி ஊடாக படகில் வந்தவர்களாம்..

ஆசிரியர் - Editor I
கௌதாரிமுனையில் யாழ்.ஆனைக்கோட்டை இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்கள் தப்பி ஓட்டம்! குருநகர் பகுதி ஊடாக படகில் வந்தவர்களாம்..

கிளிநொச்சி - பூநகரி கௌதாாமுனை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் படகுமூலம் தப்பி சென்றுள்ளதாக தொியவருகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பூநகரி கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த 

இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

ஆனைக்கோட்டையிலிருந்து 17 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது. இதேபோல் படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் 

இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 

படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தையடுத்து குருநகரிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாகவும், அந்த குழு யாழ்.குருநகர் பகுதிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் நேற்றிரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், 

வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பார்வையிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு