21 வயதான தனது மகளை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபரை பித்தளை பாத்திரத்தால் அடித்து கொன்ற தந்தை!

ஆசிரியர் - Editor I
21 வயதான தனது மகளை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபரை பித்தளை பாத்திரத்தால் அடித்து கொன்ற தந்தை!

மகளை ஏமாற்றி 2வது திருமணம் செய்துகொண்ட நபரை பித்தளை பாத்திரத்தால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் பதுளை - ஒலியமண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருமணம் செய்து 2 பிள்ளைகளுக்கு தந்தையான 25 வயதான நபர் ஒருவர், 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 வயதான பெண்ணை 2வதாக திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவி பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடு பதிவு செய்த நிலையில் பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை நடாத்தியிருக்கின்றனர். 

அதன் பின்னர் இரண்டாவது மனைவியின் தந்தை, குறித்த நபரையும் மகளையும் வேனில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், 

அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவது மனைவியின் தந்தை, தாய் 

மற்றும் அவரது இளைய சகோதரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு