13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது! தாயின் கருக்கலைப்பு முயற்சி சிறுமியின் மரணத்திற்கு காரணமா?

ஆசிரியர் - Editor I
13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது! தாயின் கருக்கலைப்பு முயற்சி சிறுமியின் மரணத்திற்கு காரணமா?

மூங்கிலாறு கிராமத்தில் 13 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகயுள்ளதாகவும், சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவர் ஆகிய 4 பேர் பொலிஸாரினால் விசாரிக்கப்படுகின்றனர். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, சிறுமி கடந்த 15ம் திகதி காணாமல்போன நிலையில் 18ம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். தனது சகோதரி வீட்டிற்கு சென்றிருந்த சிறுமி காணாமல்போனதாக பெற்றோர் ஆரம்பத்தில் கூறியிருந்தனர். 

எனினும் அது பொய் என பொலிஸார் விசாரணை மூலம் கண்டறிந்துள்ளனர். கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின்போது சிறுமியின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

சிறுமியின் தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவரை தடுத்து வைத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். நிதர்சனாவின் தாய் இதுவரை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. 

எனினும் அவரது தந்தை நடந்த சம்பவங்களை ஒப்புதல் வாக்குமூலமாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். வீட்டில் தங்கியிருந்த நிதர்சனா 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் 

கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடையச் செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையின் மூலம் தெரியவருகிறது.சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், 

மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் அக்காவின் கணவரின் வீட்டில் 

நேற்றய தினம் தடயவியல் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், அது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கண்டறியும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளின் பொருட்டு சம்பவ இடத்திற்கு 

நேற்று சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா குறித்த கிணறுகளையும் பார்வையிட்டார். அத்துடன், சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், 

இளநீல கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு