தமிழ்தேசிய கூட்டமைப்பு மே-01ம் திகதியே தொழிலாளர் தினத்தை கொண்டாடும்...

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு மே-01ம் திகதியே தொழிலாளர் தினத்தை கொண்டாடும்...

தமிழ்தேசிய கூட்டமைப்பு மே-01 உலக தொ ழிலாளர் தினத்தை திட்டமிட்டபடி வடகிழக் கு மாகாணங்களில் மே-01ம் திகதி கொண் டாடும் என தமிழரசு கட்சியின் பொது செய லாளர் துரைராஐசிங்கம் கூறியுள்ளார்.

மே தின நிகழ்வு தொடர்பாக இன்று  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே துரைராஐசாங்கம் மேற்கண் டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், பௌத்த மத புனித நாளான வெசாக் பண்டிகையும், மே-01 தொழிலாளர் தினமும் ஒரே நாளில் வருகின்றது. இவ்வாறு முன்னரும் ஒரு தடவை வந்திருக்கின்றது.


அப்போது தொழிலாளர் தினத்தை ஒரு வாரம் பிற்போட்டு நடத்தப்பட்டது. அவ்வாறே இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தையும் ஒரு வாரம் பின் தள்ளி நடத்தவேண்டும் என மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புக்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கமைய மே-07ம் திகதி தொ ழிலாளர் தினத்தை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளினதும் செயலாளர்களிடமும் கேட்டுள்ளது. 


ஆனாலும் சர்வதேச தொழிலாளர் தினம் மே-01ம் திகதியே என்பதால் தொழிலா ளர்களை கௌரவிக்கவேண்டும் என்பதால் பௌத்தர்களுக்கும், பௌத்த வணக்க தலங்களுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பௌத்தர்கள் வாழாத வடகிழக்கு மாகாணங்களில் மே-01ம் திகதி சர் வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கமைவாக வடமாகாணத்தில் பருத்துறையிலும், கிழக்கு மாகாணத்தில் வெல்லா வெளியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் நடைபெறும். தமிழ்தேசிய கூட்டமைப்பின் இந்த தீர்மானம் n பளத்த மதத்தவர்களையோ, மகாநாயக்கர்களையோ, பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கையோ மலினப்படுத்துவதாக அமையாது. அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.

அந்தவகையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தகர்கள் இந்த மே தினத்திற்காக தமது தொழிலாளர்கள் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வும் கேட்டுக் கொண்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு