மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த 17 வயதான மாணவியை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த 17 வயதான மாணவியை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு..

மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் காணாமல்போயுள்ளதாக குறித்த மாணவியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

தரம் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 17 வயது லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்பொன்றிற்கு, 

நேற்றுமுன்தினம் 19.12.202 சென்ற குறித்த மானவி வீடு திரும்பவில்லையென்றும், பொலிஸ் நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பதுளை – கலன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு எடுத்து சென்றதாக கூறப்படும் 

பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை - கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, (தெப்பக்குளம்) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தோட்ட இளைஞர்கள் குழுவொன்று, 

மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது வரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. பதுளை பொலிஸ்சார் சுழியோடிகள் சகிதம், குறித்த நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர். 

இம் மாணவி குறிப்பிட்ட நீர் நிலையில் விழுந்து தற்கொலை செய்துள்ளாரா அல்லது திசை திருப்பும் வகையில் அவரது புத்தகப்பை பாதணிகள் ஆகியவற்றை நீர் நிலை அருகில் போடப்பட்டு கடத்தப்பட்டாரா என்ற வகையில் 

பொலிசார் இரு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அநத மாணவி குறித்து தொடர்ந்தும் பதுளை பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு