வீடு புகுந்து வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்!

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்!

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் காளிதாஸ் நாகேந்திரகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை குறித்த நபருடைய வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தது. 

சம்பவத்தில் காயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு