திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 15 பேருக்கு கொவிட் தொற்று! 30 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 15 பேருக்கு கொவிட் தொற்று! 30 பேர் தனிமைப்படுத்தலில்..

திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நிக்கவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருமண வைபவத்திற்காக 20 பேர் கொண்ட குழுவொன்று நிக்கவெரட்டியவில் இருந்து மாத்தறைக்குச் சென்றுள்ளது. 

அவர்களில் 15 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,

சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 15 பேரின் 10 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் அவர்களுடன் தொடர்பு பேணியவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக 

சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு