14 வயதான பெறாமகளை ஒரு வருடமாக பலாத்காரம் செய்துவந்த சிறுமியின் சிறிய தந்தை கைது! சிறுமி வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
14 வயதான பெறாமகளை ஒரு வருடமாக பலாத்காரம் செய்துவந்த சிறுமியின் சிறிய தந்தை கைது! சிறுமி வைத்தியசாலையில் அனுமதி..

14 வயதான பெறாமகளை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் பசறை - வறாதொல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது சித்தப்பாவினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சுமார் ஒரு வருட காலமாக குறித்த நபரினால் தொடர்ந்தும் 

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமியே பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைக் தொடர்ந்து சிறுமியின் சித்தப்பா பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 

நேற்றைய தினம் (09/12) பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு